Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Thursday, November 24, 2011

தாம்பரத்தில் ரூபாய் 10,000/- கல்வி உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 24/11/2011 அன்று ரூபாய் 10,000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது.

மாநில தலைமையிலிருந்து பெறப்பட்ட கல்வி உதவி தொகையை கேட்ரிங் படிக்கும் தாம்பரத்தை சேர்ந்த ஜகுபர் சாதிக் என்ற மாணவருக்கு வழங்கப்பட்டது.

Wednesday, November 23, 2011

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் 23-11-2011 புதன்கிழமையன்று ஆலந்தூர் கிளை பெண்கள் மதரசாவில் வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் அமீருக்கு கட்டுப்படுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

ஆலந்தூரில் ரூபாய் 1000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் 23-11-2011 புதன்கிழமையன்று இம்ரான் ஷரீப் (வயது 26) என்ற நபருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1000/- வழங்கப்பட்டது.

இந்த நபர் வேலை செய்துகொண்டிருத போது மாடியில் இருந்து கீழே விழுந்த காரணமாக சிகிச்சை எடுத்து வருகிறார்.

ஆலந்தூரில் ரூபாய் 2000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் 23-11-2011 புதன்கிழமையன்று வயிற்று நோய் காரணமாக சிகிச்சை பெரும் காசிம் பீவி (வயது 40) என்ற பெண்மணிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000/- அவரது வீட்டுக்கு சென்று கொடுக்கப்பட்டது.

ஆலந்தூரில் குர்ஆன் தஃப்சீர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் இன்று 23-11-2011 புதன்கிழமையன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு தினம்தோறும் நடைபெறும் குர்ஆன் தஃப்சீர் நடைபெற்றது.

Tuesday, November 22, 2011

தாம்பரத்தில் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக 22-11-2011 செவ்வாய்கிழமையன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு வீடு வீடாக சென்று தாவா நடைபெற்றது.

இதில் தாயத்து அணிந்திருந்த சகோதரருக்கு அதன் தீங்கை பற்றி விளக்கி பின்னர் அவருடைய ஒப்புதலின் பேரில் தாயத்து அறுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


தாம்பரத்தில் வீடு வீடாக சென்று தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக 22-11-2011 செவ்வாய்கிழமையன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு வீடு வீடாக சென்று தாவா நடைபெற்றது.

இதில் அவர்களுக்கு ஏகத்துவத்தை எடுத்துரைத்தும், தொழுகை மற்றும் மறுமை வாழ்க்கை குறித்தும் தாவா செய்யப்பட்டது.