Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, November 27, 2011

பல்லாவரத்தில் தெருமுனை கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவர் அணியின் சார்பாக சென்ற 27/11/2011 ஞாயிற்றுக்கிழமையன்று மெகா போன் பிரசாரம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் ரஜப் அலி அவர்கள் இஸ்லாத்தின் இறை கொள்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பல்லாவரத்தில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவர் அணியின் சார்பாக சென்ற 27/11/2011 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சியை பார்த்து விசாரித்த கிருஸ்துவ சகோதரருக்கு தாவா செய்யப்பட்டது.


பல்லாவரம் மாணவர் அணியின் மரம் நடும் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவர் அணியின் சார்பாக சென்ற 27/11/2011 ஞாயிற்றுக்கிழமையன்று மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பல்லாவரத்தை சேர்ந்த கொங்கு வேல் தெரு மற்றும் பழனியப்பன் தெருக்களில் மரங்கள் நடப்பட்டது.

புதுப் பெருங்களத்தூரில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 27-11-2011 ஞாயிற்றுக்கிழமையன்று மாற்று மத சகோதரிகளுக்கு தாவா செய்து ஏகத்துவம், தீன்குலப் பெண்மணி, மாமனிதர் நபிகள் நாயகம் போன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Saturday, November 26, 2011

ஆலந்தூரில் தெருமுனை பிரசாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் 26-11-2011 சனிக்கிழமை மகரிப் தொழுகைக்குப் பிறகு மெகா போன் - தெருமுனை பிரசாரம் ஆலந்தூர் MKN ரோட்டில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் ரஜப் அலி அவர்கள் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பல்லாவரத்தில் ரூபாய் 6000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 26/11/2011 சனிக்கிழமையன்று ரூபாய் 6000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாலரை வயது குழந்தை நாகராஜின் மருத்துவ செலவிற்காக மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து அவரின் தந்தையிடம் மருத்துவ உதவி வழங்கிவிட்டு, அவருக்கும் மருத்துவமனையிலுள்ள மற்றவர்களுக்கும் தாவா செய்யப்பட்டது.

Thursday, November 24, 2011

ஆலந்தூரில் குர்ஆன் தஃப்சீர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் 24-11-2011 வியாழன்கிழமையன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு தினம்தோறும் நடைபெறும் குர்ஆன் தஃப்சீர் நடைபெற்றது.