Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, December 22, 2013
ஜனவரி 28 செயல்வீரர்கள் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் சார்பாக சென்ற 22-12-2013 ஞாயிற்றுக்கிழமையன்று பல்லாவரம் இனாயத் மஹாலில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் சிறப்புரையாற்றினார். ஆண்கள் பெண்கள் என பெருவாரியான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!
மேலும் இந்நிகழ்ச்சியில் காஞ்சி மேற்கு மாவட்டத்தில் தாவா பணிகளில் சிறப்பாக செயல்படும் கிளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முதல் பரிசு - குரோம்பேட்டை கிளை (ரூபாய் 10000 மதிப்புள்ள தாவா பொருட்கள்)
இரண்டாம் பரிசு - குன்றத்தூர் கிளை (ரூபாய் 6000 மதிப்புள்ள தாவா பொருட்கள்)
மூன்றாவது பரிசு - நங்கநல்லூர் கிளை (ரூபாய் 3000 மதிப்புள்ள தாவா பொருட்கள்)
மேலும் 10 கிளைகளுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இடையில் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment