Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Tuesday, November 15, 2011

தாம்பரத்தில் இஸ்லாத்தை ஏற்ற சுந்தர்ராஜன்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையில் சென்ற 15-11-2011 செவ்வாய்க்கிழமையன்று தாம்பரத்தை சேர்ந்த சகோதரர் சுந்தர்ராஜன் தாம்பரம் மஸ்ஜிதே ஹுதாவில் இஸ்லாத்தை அவரின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹம்மது இம்ரான் என்று மாற்றிக்கொண்டார்.

மேலும் மார்க்கத்தை அதன் தூய வடிவில் விளங்குவத்ர்க்காக, அவருக்கு சகோதரர் PJ அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, அர்த்தமுள்ள இஸ்லாம், இஸ்லாமிய கொள்கை மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகியவை தாம்பரம் கிளையின் சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


Monday, November 14, 2011

தாம்பரத்தில் வீடு வீடாக சென்று தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக 14-11-2011 திங்கட்கிழமையன்று தாம்பரம் மர்கஸ் இமாம் சகோதரர் அப்துல் லத்தீப் பிர்தௌஸி அவர்களை வைத்து வீடு வீடாக சென்று வாராந்திர தாவா செய்யப்பட்டது.

கிளையின் கொள்கை சகோதரர்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!

தாம்பரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக 14-11-2011 திங்கட்கிழமையன்று தாம்பரம் ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் அப்துல் லத்தீப் பிர்தௌஸி அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சிறந்த முறையில் பதிலளித்த சகோதரி ஒருவருக்கு "ஆன்லைன் PJ" என்ற புத்தகம் தாம்பரம் கிளையின் சார்பாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, November 13, 2011

ஆலந்தூரில் குர்ஆன் தஃப்சீர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 13-11-2011 ஞாயிற்றுக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வாராந்திர குர்ஆன் தஃப்சீர் நடைபெற்றது.

தாம்பரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 13-11-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று தாம்பரத்தில் உள்ள லட்சுமி நகர் மதரஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஷிஃபா அவர்கள் "இஸ்லாம் ஓர் வாழும் நெறி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பல பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Saturday, November 12, 2011

பல்லாவரத்தில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 12/11/2011 ஞாயிற்றுக்கிழமையன்று இந்து சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு, அவர் பைபிளை படித்து வருவதாக சொன்னதால் இது தான் பைபிள், பைபிளில் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம், கொள்கை விளக்கம் போன்ற 6 புத்தகங்கள் வழங்கப்பட்டது.

பட்டூரில் தாயத்திற்கு எதிராக பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் கடந்த 12-11-2011 அன்று பட்டூரில் உள்ள சில பகுதிகளுக்கு சென்று தாயத்து அணிந்திருக்கும் பெரியவர்களை சந்தித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒருவர் தனது கழுத்தில் கட்டியிருந்த தாயத்தை கழற்றினார். அல்ஹம்துலில்லாஹ் !!