Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, December 11, 2011

ஆலந்தூரில் தீ விபத்து - TNTJ உதவி


ஆலந்தூரில் கடந்த வியாழக்கிழமை (08 /12 /2011) அன்று அதிகாலையில் வ வு சி நகரில் 20 குடிசைகள் தீயில் கருகின. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலந்தூர் கிளை நிர்வாகிகள், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி உதவி செய்வதாக வாக்களித்தார்கள்.

பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு TNTJ ஆலந்தூர் கிளையின் சார்பாக 11/12 /2011 அன்று 15 குடும்பங்களுக்கு 1000/- ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டன.






ஆலந்தூரில் குர்ஆன் தஃப்சீர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் 11-12-2011 ஞாயற்றுகிழமையன்று மகரிப் பிறகு வாரம்தோறும் நடைபெறும் குர்ஆன் தஃப்சீர் நடைபெற்றது.

Saturday, December 10, 2011

தாம்பரம் கிளையின் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் தனி நபர் தாவா.

கிளை நிர்வாகிகள் 10/12/2011 அன்று நெல்லையில் நடந்த மாநில பொதுக்குழுவிற்கு ரயிலில் வரும் பொழுது மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்து இஸ்லாமிய கடவுள் கொள்கை மற்றும் பிரபஞ்சம் தோன்றியது எப்படி? என்ற பிட் நோட்டீஸ்களை வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ் !!


பட்டூரில் சந்திர கிரகண தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் கடந்த 10-12-2011 சனிக்கிழமை அன்று சந்திர கிரகணத்தை பற்றிய துண்டு பிரசுரமும் பட்டூர் கிளை மர்கஸில் சந்திர கிரகணத்தை பற்றிய பயானும், தொழுகையும் நடைபெற்றது.

அப்பகுதியில் உள்ள சகோதரர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!





நங்கநல்லூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையில் சென்ற 10-12-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஷிஃபா ஆலிமா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.


தாம்பரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 10/12/2011 அன்று கிருஷ்ணா நகரில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரி ரஹ்மத் ஆலிமா அவர்கள் நபிமார்களின் வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 25க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!


Friday, December 9, 2011

நங்கநல்லூரில் ரூபாய் 2500/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையில் குர்பானி மாட்டுத் தோல் விற்ற தொகையிலிருந்து ரூபாய் 2500/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

சென்ற 9/12/2011 வெள்ளிக்கிழமையன்று மன நோயிற்கு சிகிச்சை பெற்றும் வரும் சகோதரி அனுராதாவின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 2500/- அவரின் சகோதரர் நரசிம்மன் அவர்களிடம் வழங்கப்பட்டது.