Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, December 17, 2011

தாம்பரத்தில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக சென்ற 17/12/11 சனிக்கிழமையன்று கிருஷ்ணா நகரில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்களால் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதில் அளித்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இறுதியாக மதரஸா தக்வா(1) மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 40க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துல்லிலாஹ் !!


தாம்பரத்தில் ரூபாய் 4000/ மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக சென்ற 17/12/11 அன்று பீர் முகம்மது என்பவருக்கு ரூபாய் 4000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

பின்னர் அச்சகோதரருக்கு தர்கா வழிப்பாட்டின் தீமைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


தாம்பரத்தில் தாவா பேனர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 17/12/11 அன்று தாம்பரம் அதன் சுற்றுப்புற வீதிகளில் நான்கு தாவா பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

பேனர்களின் மொத்த அளவு 40 சதுர அடி.




Thursday, December 15, 2011

நங்கநல்லூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையில் சென்ற 15-12-2011 வியாழக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஷிஃபா ஆலிமா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

Monday, December 12, 2011

தாம்பரம் கிளையின் இணை வைத்தலுக்கு எதிரான பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் இணை வைத்தலுக்கு எதிரான பிரச்சாரம்.

கிளை நிர்வாகிகள் 11/12/2011 அன்று நெல்லையில் நடந்த மாநில பொதுக்குழு முடிந்து திரும்பி வரும் பொழுது தென்காசியில் பாவா ஒருவரிடம் இணை வைத்தலுக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

தாம்பரம் கிளையின் இணை வைத்தலுக்கு எதிரான பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக இணை வைத்தலுக்கு எதிராக பிரச்சாரம்.

தாம்பரம் கிளையின் நிர்வாகிகள் 11/12/2011 அன்று நெல்லையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு முடிந்து மேலப்பாளையம் சென்ற பொழுது தெரிந்த சகோதரர் ஒருவர் வீட்டில் இணை வைத்தலுக்கு எதிராக பிரச்சாரம் செய்து அந்த வீட்டிலுள்ள தகடு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, December 11, 2011

பட்டூரில் வாராந்திர பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் கடந்த 11-12-2011 ஆண்களுக்கான வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோ. யாசின் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் காதல் என்ற தலைப்பில் உறையாற்றினார். இதில் சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!