Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Saturday, December 8, 2012
பட்டூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் சுவர்களில் தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 08-12-2012 சனிக்கிழமையன்று பட்டூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் மூன்று இடங்களில் சுவர்களில் திருக்குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழிகள் எழுதப்பட்டது.
அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் அவன் தூதரை மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற தலைப்பில் பட்டூர் பகுதியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.
பட்டுரில் இஸ்லாமியர்கள் மத்தியில் அதிகமாக தற்கொலைகள் காணப்படுவதால் தற்கொலையை தடை செய்யும் இஸ்லாமிய மார்க்கம் என்ற நபிமொழி சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.
மாங்காடு பகுதியில் மாற்று மத சகோதரர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு தாவா செய்யும் விதமாக மனித குல வழிகாட்டி மாமானிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறுகளில் சில என்ற தலைப்பிலும் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ் !!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment