Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, November 27, 2011

குன்றத்தூரில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 27-11-11 ஞாயிற்றுக்கிழமையன்று குன்றத்தூர் மர்கஸில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தௌஸி அவர்கள் கலந்து கொண்டு மார்க்க மற்றும் இயக்க சம்பந்தமான அணைத்து கேள்விகளுக்கும் தெளிவாக விளக்கமளித்தார். நூறுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!



பட்டூரில் தர்பியா முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 27/11/2011 ஞாயிற்றுக்கிழமையன்று பட்டூர் மர்கஸில் கிளை தர்பியா (நல்லொழுக்க பயிற்சி) முகாம் நடைபெற்றது.

இதில் மாநில துணை தலைவர் சகோதரர் கோவை ரஹீம் அவர்கள் கொள்கை உறுதி என்ற தலைப்பிலும் தணிக்கை குழு உறுப்பினர் சகோதரர் தவ்ஃபீக் TNTJ வின் தனித்தன்மை என்ற தலைப்பிலும் பயிற்சி அளித்தார்கள். இதில் சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!



ஆலந்தூரில் குர்ஆன் தஃப்சீர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் 27-11-2011 ஞாயற்றுகிழமை மகரிப் தொழுகைக்குப் பிறகு வாரம்தோறும் நடைபெறும் குர்ஆன் தப்சீர் நடைபெற்றது.

இதை சகோதரர் ஒழி அவர்கள் நடத்தினார்கள்.

பல்லாவரத்தில் தெருமுனை கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவர் அணியின் சார்பாக சென்ற 27/11/2011 ஞாயிற்றுக்கிழமையன்று மெகா போன் பிரசாரம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் ரஜப் அலி அவர்கள் இஸ்லாத்தின் இறை கொள்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பல்லாவரத்தில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவர் அணியின் சார்பாக சென்ற 27/11/2011 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சியை பார்த்து விசாரித்த கிருஸ்துவ சகோதரருக்கு தாவா செய்யப்பட்டது.


பல்லாவரம் மாணவர் அணியின் மரம் நடும் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவர் அணியின் சார்பாக சென்ற 27/11/2011 ஞாயிற்றுக்கிழமையன்று மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பல்லாவரத்தை சேர்ந்த கொங்கு வேல் தெரு மற்றும் பழனியப்பன் தெருக்களில் மரங்கள் நடப்பட்டது.

புதுப் பெருங்களத்தூரில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 27-11-2011 ஞாயிற்றுக்கிழமையன்று மாற்று மத சகோதரிகளுக்கு தாவா செய்து ஏகத்துவம், தீன்குலப் பெண்மணி, மாமனிதர் நபிகள் நாயகம் போன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது.