Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, December 18, 2011

தாம்பரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக 18/12/11 அன்று லட்சுமி நகரில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் சகோதரி ரஹ்மத் ஆலிமா அவர்கள் பாவமான காரியங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டு அதில் பதிலளித்த ஒரு பெண்மணிக்கு பரிசாக தீன்குல பெண்மணி ஒரு வருட சந்தா இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

ஆலந்தூரில் வாராந்திர பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 18-12-2011 ஞாயிற்றுக்கிழமையன்று மக்ரிபிர்க்கு பிறகு வாராந்திர பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஆலந்தூர் யூசுப் அவர்கள் இஸ்லாம் சொல்லும் ஒளுங்குமுறை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

ஆலந்தூரில் மதரஸா மாணவர்கள் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 18-12-2011 ஞாயிற்றுக்கிழமையன்று மக்ரிபிர்க்கு பிறகு மதரஸா மாணவர்கள் நடத்திய சிறிய பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

குன்றத்தூரில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையில் சென்ற 18-12-2011 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தார்.


தாம்பரத்தில் சிறப்பு பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக சென்ற 18/12/11 அன்று மதரஸா தக்வா(3) மாணவர்களுக்கு வாரந்திர சிறப்பு பயிற்சி வகுப்பு சகோதரர் லத்தீப் ஃபிர்தௌசி அவர்களால் நடத்தப்பட்டது.

இதில் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, ஒழுவின் முறை, தொழுகை, நோன்பு, துஆ மனனம் ஆகியவை மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. இதில் 15 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!


தாம்பரத்தில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக சென்ற 18/12/11 ஞாயிற்றுக்கிழமையன்று சுபுஹு தொழுகைக்கு பிறகு வீடு வீடாக சென்று சுபுஹு தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அழைப்பு பணி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

காஞ்சி மேற்கில் ரூபாய் 4000/- கல்வி உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் சார்பாக சென்ற 18/12/2011 அன்று மடிப்பாக்கத்தை சேர்ந்த ஏழை சகோதரியின் மகனுக்கு மற்றும் மகளுக்கு கல்வி உதவியாக ரூபாய் 4000/-, 2000/- வீதம் இருவருக்கு வழங்கப்பட்டது.