Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Wednesday, November 30, 2011

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 30-11-2011 புதன்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் TNTJ ஆலந்தூர் கிளை பெண்கள் மதரசாவில் நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஷா ஆலிமா அவர்கள் மறுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

பல்லாவரத்தில் ரூபாய் 5000/- மதிப்பில் வீடு சீரமைப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளைகளின் சார்பாக சென்ற 30/11/2011 புதன்கிழமையன்று ரூபாய் 5000/- மதிப்பில் இடிந்து விழுந்த வீட்டை சீரமைத்து தந்தனர்.

பல்லாவரம் மற்றும் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளைகள் இணைந்து மழையின் காரணமாக இடிந்து விழுந்த ஒரு ஏழை சகோதரரின் வீட்டை சீரமைத்து தந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!


Monday, November 28, 2011

பட்டூரில் நூலகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 28-11-11 திங்கட்கிழமை முதல் பட்டூர் பெண்கள் மதரஸாவில் நூலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. அல்ஹம்துலில்லாஹ் !!!



தாம்பரத்தில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 28/11/2011 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு கிளையின் இமாமைக் கொண்டு தனி நபர் தாவா செய்யப்பட்டது.



பல்லாவரத்தில் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை சார்பாக சென்ற 28/11/2011 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஒருவர் கட்டியிருந்த தாயத்து கயிற்றின் தீமையை விளக்கி கழற்றி எரியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, November 27, 2011

புதுப் பெருங்களத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 27-11-2011 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ரஹ்மத் ஆலிமா அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பான முறையில் பதிலளித்த சகோதரிக்கு பரிசு வழங்கப்பட்டது. மாற்று மத சகோதரியும் ஆர்வத்துடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


குன்றத்தூரில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 27-11-11 ஞாயிற்றுக்கிழமையன்று குன்றத்தூர் மர்கஸில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தௌஸி அவர்கள் கலந்து கொண்டு மார்க்க மற்றும் இயக்க சம்பந்தமான அணைத்து கேள்விகளுக்கும் தெளிவாக விளக்கமளித்தார். நூறுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!