Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, March 4, 2012

ஆலந்தூரில் குர்ஆன் தஃப்சீர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 04-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று குர்ஆன் தஃப்சீர் நடைபெற்றது.

இதை சகோதரர் ஃபாரூக் அவர்கள் நடத்தினார்கள்.

தாம்பரத்தில் வாரந்திர சிறப்பு பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரா வாரம் மதரஸா தக்வா(3) மாணவர்களுக்கு வாரந்திர சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

இதில் சகோதரர் அப்துல் லத்தீஃப் ஃபிர்தௌஸி அவர்களால் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, ஒழுவின் முறை, தொழுகை, நோன்பு, துஆ மனனம் ஆகியவற்றை மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. இதில்15 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். சிறப்பாக பயிலும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ் !!



பட்டூரில் இரத்த தான முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 04-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாங்காடு பகுதியில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சித்திக் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் 50 நபர்கள் குருதிக் கொடையளித்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!


Saturday, March 3, 2012

புதுப் பெருங்களத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 03-03-2012 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஜைபுன்னிசா ஆலிமா அவர்கள் ஃபிர்அவுன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பட்டூரில் மெகா ஃபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 03-03-2012 சனிக்கிழமையன்று மாங்காடு பகுதிகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை செயலாளர் சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் இஸ்லாத்தில் சமுதாயப் பணி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!

Friday, March 2, 2012

பட்டூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 02-03-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ருமானா ஃபாத்திமா ஆலிமா அவர்கள் பொற்றோரை பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்த பயான் நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Thursday, March 1, 2012

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 01-03-2012 வியாழக்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் ஆஷர் கானாவில் நடைபெற்றது.

இதில் சகோதரி ஷிஃபா ஆலிமா அவர்கள் கிரகண தொழுகையும், ஜும்மா தொழுகையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.