Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, May 6, 2012
படப்பையில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 06-05-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் யூசுப் அவர்கள் சஹாபா பெண்களின் வாழ்வும், இன்றைய பெண்களின் நிலையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Saturday, May 5, 2012
புதுப் பெருங்களத்தூரில் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 05-05-2012 சனிக்கிழமையன்று மதரஸா மாணவர்களுக்கான பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஜைபுன்னிசா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!
Tuesday, May 1, 2012
Sunday, April 29, 2012
பட்டூரில் நோட்டீஸ் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 29-04-2011 ஞாயிற்றுக்கிழமையன்று பட்டூர் பகுகளில் சாதிவாரியாக கணக்கெடுப்பு முஸ்லிம்களின் கவனத்திற்கு என்ற துண்டு பிரசுரம் வீடு வீடாக சென்று விநியோகித்து மக்களிடம் விழிப்புணர்வு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!!
Friday, April 27, 2012
பட்டூரில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 27-04-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ருமானா பாத்திமா ஆலிமா அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த பயான் நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!!
Wednesday, April 25, 2012
தாம்பரத்தில் இஸ்லாத்தை தழுவிய விஜய்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் மர்கஸில் சென்ற 25-04-2012 புதன்கிழமையன்று விஜய் என்ற சகோதரர் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் கலீமா சொல்லி இஸ்லாத்தை தழுவினார்.
அவருக்கு இஸ்லாம் கூறும் மனிதநேயம், இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் ஆகிய DVDக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ் !!!
Tuesday, April 24, 2012
தாம்பரத்தில் பாதிரியாரிடம் தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையை சார்ந்த சகோதரர்களிடத்தில் 24-04-2012 அன்று மாலை மண்ணிவாக்கம் என்ற கிராமத்தில் உள்ள பாதிரியார் மூசே அவர்கள் திருக்குர்ஆனை பற்றி சந்தேகங்கள் இருப்பதாகவும் தங்களிடத்தில் பேச விரும்புவதாகவும் தெரிவித்தார். இதனைஅடுத்து கிளை சகோதரர்கள் அங்கு சென்று திருக்குர் ஆனை பற்றி தெளிவுப்படுத்தினர். இறுதியாக பாதிரியார் மூசே அவர்களுக்கு கிளை சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Subscribe to:
Posts (Atom)